Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/விவசாயத்தை அழிப்பது எந்த வகை பன்றிகள்; கூண்டு வைத்து பிடித்தாலும் பலனில்லாததால் குழப்பம்

விவசாயத்தை அழிப்பது எந்த வகை பன்றிகள்; கூண்டு வைத்து பிடித்தாலும் பலனில்லாததால் குழப்பம்

விவசாயத்தை அழிப்பது எந்த வகை பன்றிகள்; கூண்டு வைத்து பிடித்தாலும் பலனில்லாததால் குழப்பம்

விவசாயத்தை அழிப்பது எந்த வகை பன்றிகள்; கூண்டு வைத்து பிடித்தாலும் பலனில்லாததால் குழப்பம்

UPDATED : ஜூன் 08, 2025 07:20 AMADDED : ஜூன் 08, 2025 04:45 AM


Google News
Latest Tamil News
கோடையில் ஆயிரம் ஏக்கர் வரை நெல் விவசாயம் நடைபெறும், கிராமப்புற கண்மாய்களில் கருவேல மர கூட்டத்தின் இடையே பன்றிகள் வசிக்கின்றன.குறிப்பாக பிரமனுார், திருப்புவனம், பழையனுார் உள்ளிட்ட கண்மாய்களில் வசிக்கும் பன்றிகளால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் விவசாய சாகுபடி குறைந்துவிட்டது.

விவசாயத்தை அழிக்கும்பன்றிகள் காட்டுப்பன்றிகள் இல்லை. அவற்றை தாராளமாக பிடிக்கலாம் என தெரிவித்ததையடுத்து விவசாயிகள் பன்றிகளை பிடிக்க முயற்சித்து வருகின்றனர். பன்றிகளை பிடிக்க வலை உள்ளிட்டவைகளை மானிய விலையில் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

விவசாயிகள் தரப்பில் கூறியதாவது:

பன்றிகளை ஆய்வு செய்ய குழு அமைத்திருந்தும் அவர்கள் பன்றிகளை பற்றி எந்த முடிவிற்கும் வர முடியவில்லை. வேறு வழியின்றி விவசாயிகளே கூண்டு வைத்து ஒரு பன்றியை உயிருடன் பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

அதனை சென்னைக்கு அனுப்பி ஆய்வு செய்த பின் தான் அது காட்டுப்பன்றி அல்ல என அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது தண்ணீர், உணவு தேடி இரவு நேரத்தில் பன்றிகள் வெளியே வருகிறது. அதனை பிடிக்க வலை, டார்ச் லைட் உள்ளிட்டவற்றை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

கண்மாய்களில் உள்ள பன்றிகளை முழுமையாக பிடித்து அப்புறப்படுத்தினால் தான் செப்டம்பரில் சாகுபடி பரப்பளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us