Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/கண்டதேவி கோயில் புதிய தேர் ஜன.21ல் வெள்ளோட்டம்

கண்டதேவி கோயில் புதிய தேர் ஜன.21ல் வெள்ளோட்டம்

கண்டதேவி கோயில் புதிய தேர் ஜன.21ல் வெள்ளோட்டம்

கண்டதேவி கோயில் புதிய தேர் ஜன.21ல் வெள்ளோட்டம்

ADDED : ஜன 06, 2024 05:50 AM


Google News
Latest Tamil News
தேவகோட்டை: தேவகோட்டை அருகேயுள்ள கண்டதேவியில் சிவகங்கை சமஸ்தான நிர்வாகத்திற்குட்பட்ட சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் உள்ளது.இக்கோயில் தேரோட்டம் ஆனியில் கேட்டை நட்சத்திரத்தில் நடைபெறும்.

தேரோட்டத்தில் வடம் பிடிப்பது தொடர்பாக பிரச்னை ஏற்பட்டதால் சில ஆண்டாக தேரோட்டம் நடத்தப்படவில்லை.

இந்நிலையில் புதிதாக தேர் செய்ய முடிவு செய்யப்பட்டு பணி முடிந்தாலும் தேரோட்டம் நடக்கவில்லை.இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கும் நடந்தது.

வெள்ளோட்ட தேதியை முடிவு செய்ய கோர்ட் உத்தரவிட்டது. கோர்ட் உத்தரவை தொடர்ந்து சிவகங்கை கலெக்டர் ஆஷாஅஜித் தலைமையில் தேர் தொடர்பான அனைத்து மக்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவு காணப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அரசு தரப்பில் வரும் ஜன. 21 ந்தேதி கண்டதேவி தேர் வெள்ளோட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு பணி நடந்து வருகிறது. இந்நிலையில் புதிய தேரை வழக்கமான இடத்திலிருந்து சற்று தள்ளி நிறுத்தி இருந்தனர்.

தற்போது வழக்கமான இடத்தில் தேரை நிறுத்த முடிவு செய்தனர். நேற்று காலை தேருக்கு மாலை அணிவித்து வழிபாடு நடத்தி, கழற்றி வைக்கப்பட்டு இருந்த ஹைட்ராலிக் பிரேக் மீண்டும் பொருத்தி புதிய தேரை வழக்கமாக சுவாமி ஏற்றும் கருப்பர் கோயில் அருகே நிலை நிறுத்தினர்.வெள்ளோட்டம் சுமூகமாக நடக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us