ADDED : ஜன 09, 2024 12:22 AM

சிவகங்கை : சிவகங்கையில் இந்திய கம்யூ., சார்பில் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் தென் மாவட்டங்களை இயற்கை தேசிய பேரிடராக அறிவிக்க கோரியும் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்கவும், மத்திய அரசிடம் இருந்து 21 கோடியே 692 லட்சம் கோடி தமிழகத்திற்கு வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சாத்தையா, மாவட்ட துணை செயலாளர் கோபால், முன்னாள் எம்.எல்.ஏ., தங்கமணி, நகர செயலாளர் மருது கலந்து கொண்டனர்.


