/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வில் 4 சதவீத இட ஒதுக்கீடு அரசு உத்தரவு மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வில் 4 சதவீத இட ஒதுக்கீடு அரசு உத்தரவு
மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வில் 4 சதவீத இட ஒதுக்கீடு அரசு உத்தரவு
மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வில் 4 சதவீத இட ஒதுக்கீடு அரசு உத்தரவு
மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வில் 4 சதவீத இட ஒதுக்கீடு அரசு உத்தரவு
ADDED : செப் 17, 2025 02:29 AM
சிவகங்கை:அரசு ஊழியர்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வின் போது 4 சதவீத ஒதுக்கீடு வழங்க வேண்டும் என உத்தர விடப்பட்டுள்ளது.
அரசு அலுவலகங்களில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வின் போது 4 சதவீத ஒதுக்கீடு வழங்க வேண்டும் என அந்த சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். இதை பரிசீலித்த அரசு பார்வையற்ற, குறைந்த கண்பார்வையுள்ள, காதுகேளாதோர், ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர், பிற மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வு பட்டியல் தயாரிக்கும் போது 4 சதவீத ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் நல கமிஷனர் எம்.லட்சுமி உத்தரவிட்டுள்ளார்.
மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி கூறியதாவது: 2025 ஜூன் 1 முதல் இந்த உத்தரவை பின்பற்ற வேண்டும். பதவி உயர்வுக்கான மூப்பு பட்டியல் தயாரிக்கும் போது, 4 சதவீதம் மாற்றுத்திறனாளி ஊழியர், அலுவலர்களுக்கு ஒதுக்கீடு படி பதவி உயர்வு தரப்பட வேண்டும் என துறை மற்றும் கருவூலக கணக்குத்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.