Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ வீட்டில் தங்கம், வெண்கலம் திருட்டு

வீட்டில் தங்கம், வெண்கலம் திருட்டு

வீட்டில் தங்கம், வெண்கலம் திருட்டு

வீட்டில் தங்கம், வெண்கலம் திருட்டு

ADDED : செப் 14, 2025 03:43 AM


Google News
சிவகங்கை:சிவகங்கை மாவட்டம் காளையார்மங்கலத்தில் வீட்டின் பூட்டை உடைத்த மர்மநபர்கள் தங்க நகை, வெண்கலம், பித்தளை பொருட்களை திருடிச்சென்றனர்.

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்தவர் பாபு மனைவி ராணி 47. இவரது சொந்த ஊர் காளையார்மங்கலம்.இங்கு இவருக்கும் இவரது பங்காளிகளுக்கும் வீடு உள்ளது. இந்த வீட்டில் தங்க நகைகள், பித்தளை, வெண்கலப் பொருட்கள் வைத்திருந்தனர்.

செப்.4 முதல் 12க்குள் மர்மநபர்கள் இந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த 30 கிராம் தங்க நகைகள், 63 கிலோ வெண்கலப் பொருட்கள், ஏழரை கிலோ பித்தளை பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us