ADDED : ஜூன் 17, 2025 06:17 AM
சிவகங்கை; சிவகங்கை இன்ஸ்பெக்டர் அன்னராஜ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
பஸ் ஸ்டாண்டில் நின்ற ராமநாதபுரம் மாவட்டம் கமுதக்குடி அங்குச்சாமி மகன் யோகேஸ்வரன் 21, நாகநாதன் மகன் சரவணன் 21 இருவரை சோதனை செய்தனர். அவர்களிடம் 25 கிராம் கஞ்சா பொட்டலம் இருந்தது இருவரையும் கைது செய்து, கஞ்சா பொட்டலம் மற்றும் டூவீலர் பறிமுதல் செய்யப்பட்டது.