Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/இலவச மரக்கன்று வழங்கல்

இலவச மரக்கன்று வழங்கல்

இலவச மரக்கன்று வழங்கல்

இலவச மரக்கன்று வழங்கல்

ADDED : ஜூன் 24, 2024 01:46 AM


Google News
தேவகோட்டை : சிவகங்கை மாவட்டத்தில் வனத்துறை சார்பாக மரங்கள் வளர்ப்பில் பரப்பளவை அதிகரிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

இத்திட்டத்தின் கீழ் தேவகோட்டை, காரைக்குடி உட்பட சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், கல்வி நிறுவனங்கள், அரசு நிறுவனங்களுக்கு பணபலன் தரும் மரங்களான மகாகனி, செம்மரம் , வேம்பு, புளி ஆகிய மரங்களின் வளர்க்கும் வகையில் வனத்துறை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளனர்.இந்த மரங்களுக்கான கன்றுகள் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உருவாக்கப்பட்டு உள்ளது.மரங்கள் வளர்க்க விருப்பம் உள்ளவர்கள் 97869 49432 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us