Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/இலவச காளான் வளர்ப்பு பயிற்சி

இலவச காளான் வளர்ப்பு பயிற்சி

இலவச காளான் வளர்ப்பு பயிற்சி

இலவச காளான் வளர்ப்பு பயிற்சி

ADDED : ஜன 08, 2024 06:04 AM


Google News
சிவகங்கை : காளையார்கோவில் புனித மைக்கேல் இன்ஜி., கல்லுாரியில் காளான் வளர்ப்பு பற்றிய 30 நாட்கள் இலவச பயிற்சி வழங்கப்படும் என குறு,சிறு,நடுத்தர நிறுவன உதவி இயக்குனர் உமா சந்திரிகா தெரிவித்தார்.

அவர் கூறியதாவது, ஜன., 10 முதல் இக்கல்லுாரியில் காளான் வளர்ப்பு மற்றும் மதிப்பு கூட்டுதல் பற்றிய இலவச பயிற்சி வழங்கப்படும்.

பயிற்சி தினமும் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடக்கும். எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 18 முதல் 45 வயதிற்கு உட்பட்டோர் பங்கேற்கலாம். அனுமதி இலவசம்.

பயிற்சி ஜன.,10 ல் துவங்கி பிப்., 19 வரை நடைபெறும். இதில் காளான் வளர்ப்பு, மதிப்பு கூட்டுதல் பற்றிய செய்முறை விளக்கம், அரசு செயல்படுத்தும் மத்திய, மாநில அரசின் தொழில் திட்டங்கள், மார்க்கெட்டிங் தொடர்பாக பயிற்சி அளிக்கப்படும். பயிற்சின் முடிவில் பங்கேற்க அனைவருக்கும் சான்று வழங்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு 0452 - 2918 313ல் தொடர்பு கொள்ளலாம், என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us