/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ பழக்கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு: 2 கடைக்கு ரூ.3000 அபராதம் பழக்கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு: 2 கடைக்கு ரூ.3000 அபராதம்
பழக்கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு: 2 கடைக்கு ரூ.3000 அபராதம்
பழக்கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு: 2 கடைக்கு ரூ.3000 அபராதம்
பழக்கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு: 2 கடைக்கு ரூ.3000 அபராதம்
ADDED : மார் 25, 2025 05:17 AM
சிவகங்கை: சிவகங்கையில் உள்ள பழக்கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் சரவணக்குமார் திடீர் ஆய்வு செய்தார்.
திருப்புத்துார் ரோடு, காந்தி வீதி, சிவன்கோயில், மஜித் ரோடு உள்ளிட்ட கடைகளில் நடத்திய ஆய்வில் தரமின்றி, கெட்டுப்போன 200 கிலோ பழங்களை பறிமுதல் செய்து அழித்தார்.
இரண்டு கடைகளுக்கு தலா ரூ.3000 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.