Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ பிள்ளைவயல் காளியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா துவக்கம்;   ஜூலை 11ல் சந்தனக்காப்பு அலங்காரம்  

பிள்ளைவயல் காளியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா துவக்கம்;   ஜூலை 11ல் சந்தனக்காப்பு அலங்காரம்  

பிள்ளைவயல் காளியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா துவக்கம்;   ஜூலை 11ல் சந்தனக்காப்பு அலங்காரம்  

பிள்ளைவயல் காளியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா துவக்கம்;   ஜூலை 11ல் சந்தனக்காப்பு அலங்காரம்  

ADDED : ஜூலை 05, 2025 12:43 AM


Google News
சிவகங்கை; சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயிலில் கொடியேற்றம், காப்பு கட்டுடன் பூச்சொரிதல் விழா நேற்று துவங்கியது.

ஹிந்து அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயிலில் நேற்று காலை 9:15 முதல் 9:40 மணிக்குள் கொடியேற்றத்துடன் பூச்சொரிதல் விழா துவங்கியது. அம்மனுக்கு காப்பு கட்டி, சிறப்பு பூஜை செய்தனர்.

நேற்று மாலை 4:45 மணிக்கு தெப்பக்குளத்தில் இருந்து பூக்கரகம் எடுத்து ஊர்வலமாக பிள்ளைவயல் காளி கோயிலுக்கு வந்தனர்.

மாலை 6:00 மணிக்கு பக்தர்கள் சன்னதி முன் பூக்குழி இறங்கி நேர்த்தி செலுத்தினர். அம்மனுக்குசிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது.

பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு தினமும் மாலை 6:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடைபெறும். ஜூலை 9ம் தேதி காலை 7:00 முதல் இரவு 7:00 மணி வரை ஏகதின லட்சார்ச்சனை, அதற்கு பின் அம்மன் திருவீதி உலா நடைபெறும்.

ஜூலை 11 அன்று காலை 5:00 மணிக்கு அம்மனுக்கு பாலபிேஷகம், சகல அபிேஷகம்,நைவேத்தியம் நடைபெறும். சந்தனக்காப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருள்வார்.

நகரின் பல்வேறு வீதிகளில் இருந்து பெண்கள் பூத்தட்டுக்களை ஏந்தி ஊர்வலமாக பிள்ளைவயல் காளி கோயிலுக்கு வந்து, அம்மனுக்கு பூச்சொரிதல் நடத்துவர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us