ADDED : மார் 27, 2025 06:57 AM
திருப்புத்துார்: திருப்புத்துார் முத்தையா மெமோரியல் கல்லூரியில் பயிற்சி மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது.
இக்கல்லூரியில் மத்திய அரசின் கிராமப்புற இளைஞர்களுக்கான பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புக்கான திட்டத்தின் கீழ் மாணவ மாணவியர்களுக்கு பல்துறைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. மாணவர்களுக்கு பயிற்சிக்கான உபகரணங்கள் வழங்கும் விழாவில் முதல்வர் வெங்கடேசன் வரவேற்றார். தாசில்தார் மாணிக்கவாசகம், கட்டட பொறியாளர் அண்ணாதுரை, திட்ட மேலாளர் எலிசா, தர கட்டுப்பாட்டு ஆய்வாளர் முத்துகிருஷ்ணன், நிர்வாக அலுவலர் சிவராம மூர்த்தி பங்கேற்றனர். பேராசிரியர் சரவணன் நன்றி கூறினார்.