ADDED : ஜூன் 26, 2025 10:32 PM
சிவகங்கை; மாவட்ட அளவில் 4 ஆண்டில் 3,862 விவசாயிகளுக்கு ரூ.42.23 கோடி செலவில் மின்வாரியம் சார்பில் இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒரு லட்சம் இலவச விவசாய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் பல ஆண்டுகளாக விண்ணப்பித்து காத்திருக்கும் விவசாயிகளில், கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 3,862 விவசாயிகளுக்கு ரூ.42.23 கோடியில் இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஆண்டில் (2024--2025) மட்டும் 172 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கியுள்ளனர்.