ADDED : செப் 09, 2025 04:07 AM
தேவகோட்டை: மிலாது நபியை முன்னிட்டு மதுக்கடைகளுக்கு விடுமுறை என்பதால், கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீசார் தகவல் கிடைத்தது.
போலீசார் ஆய்வு செய்த போது மது பாட்டில்களை வைத்திருந்த ஆறாவயல் அருகே உள்ள சின்ன உஞ்சனையை சேர்ந்த முருகானந்தம் 40., (தற்காலிக மின் வாரிய பணியாளர்) என்பவரை ஆறாவயல் போலீசார் கைது செய்தனர் அவரிடமிருந்து 25 மது பாட்டில்கள், விற்பனை செய்து வைத்திருந்த பணத்தையும் பறிமுதல் செய்தனர்.