ADDED : ஜூன் 26, 2025 01:10 AM
சிவகங்கை: ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள ஆவரேந்தல் பகுதியை சேர்ந்தவர் சிங்கத்துரை மகன் உத்திஸ் 29. இவர் சிவகங்கையில் இருந்து மானாமதுரை செல்லும் தனியார் பஸ்சில் டிரைவராக பணிபுரிகிறார். இவர் நேற்று முன்தினம் தனது சொந்த ஊரில் இருந்து டூவீலரில் பணிக்கு சிவகங்கை வந்தார்.
பையூர் அருகே வரும் போது எதிரே வந்த லாரி மோதியது. இதில் உத்திஸ் சம்பவ இடத்திலேயே இறந்தார். விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.