ADDED : ஜூலை 03, 2025 03:20 AM
நாச்சியாபுரம்: தென்கரை மௌண்ட் சீயோன் சில்வர் ஜுபிலி சி.பி.எஸ்.இ.பள்ளியில் தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டது.
காரைக்குடி ஜெடயா ஸ்டீவ் மருத்துவமனை ஆலோசகர் டாக்டர் எஸ்.ஏ.அமலன் மாணவர்களிடம் பயனுள்ள சுகாதாரக் குறிப்பை பகிர்ந்து கொண்டார். பள்ளி அறங்காவலர் விவியன் ஜெய்சன் வரவேற்றார். முதல்வர் அர்ஷியா பாத்திமா விருந்தினருக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார். மழலையர் பள்ளி மாணவர்கள் மருத்துவர்களாக உடையணிந்து, டாக்டர் அமலனுடன் கலந்துரையாடினர்.