சிவகங்கை: தமிழ்நாடு கொசுப் புழு ஒழிப்பு மஸ்துார் சங்கம் சார்பில் 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் இளையராணி தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் அரசு, துணைத்தலைவர்கள் மருது, பிச்சை, சித்ரா, மாரியம்மாள், முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் சுப்பிரமணியன் கோரிக்கையை விளக்கி பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் செல்வகுமார் சிறப்புரையாற்றினார்.