/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ இடைக்காட்டூர் சர்ச்சில் நாளை அலங்கார தேர் பவனி இடைக்காட்டூர் சர்ச்சில் நாளை அலங்கார தேர் பவனி
இடைக்காட்டூர் சர்ச்சில் நாளை அலங்கார தேர் பவனி
இடைக்காட்டூர் சர்ச்சில் நாளை அலங்கார தேர் பவனி
இடைக்காட்டூர் சர்ச்சில் நாளை அலங்கார தேர் பவனி
ADDED : ஜூலை 03, 2025 03:25 AM
மானாமதுரை: மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ள திரு இருதய ஆண்டவர் சர்ச் திருவிழாவில் நாளை மின் அலங்கார தேர் பவனி நடைபெறுகிறது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூரில் புகழ்பெற்ற திரு இருதய ஆண்டவர் சர்ச்சில் வருடம் தோறும் ஆண்டு விழா நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 27ம் தேதி மாலை 6:00 மணிக்கு மறை மாவட்ட முதன்மை குரு அருள் ஜோசப் தலைமையில் கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதனைத் தொடர்ந்து தினம்தோறும் சர்ச் வளாகத்தில் அருள் பணியாளர் ஜான் வசந்தகுமார் தலைமையிலும் , பாதிரியார்கள் முன்னிலையிலும் பல்வேறு தலைப்புகளின் கீழ் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் சிவகங்கை,ராமநாதபுரம்,விருதுநகர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மின் அலங்கார தேர் பவனி நாளை 4ம் தேதி மாலை 6:00 மணிக்கும், 5ம் தேதி மாலை 6:00 மணிக்கு நற்கருணை பெரு விழாவும் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை திருத்தல அருள் பணியாளர் ஜான் வசந்தகுமார், மரியின் ஊழியர் சபை சகோதரிகள், இடைக்காட்டூர் சமூக முன்னேற்ற சங்கம், சேல்ஸ் இளைஞர் பேரவை, திரு இருதய பக்தர்கள் மற்றும் பங்கு இறை மக்கள் செய்து வருகின்றனர்.