Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ சேதமடைந்த கடகாம்பட்டி அங்கன்வாடி மையம்

சேதமடைந்த கடகாம்பட்டி அங்கன்வாடி மையம்

சேதமடைந்த கடகாம்பட்டி அங்கன்வாடி மையம்

சேதமடைந்த கடகாம்பட்டி அங்கன்வாடி மையம்

ADDED : ஜூன் 30, 2025 06:11 AM


Google News
Latest Tamil News
தேவகோட்டை : தேவகோட்டை தளக்காவயல் ஊராட்சி கடகாம்பட்டி கிராமத்தில் அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த மையத்திற்கு வடுகணி, கடகாம்பட்டி கிராமங்களில் இருந்து 18 முதல் 22 குழந்தைகள் தினமும் வருகின்றனர்.

அங்கன்வாடி மையக் கட்டடம் கட்டி பல ஆண்டுகளான நிலையில் பராமரிப்பு இன்றி சேதமடைந்து வருகிறது. கட்டட முகப்பில் அங்கன்வாடி மையம் என்ற பெயர் கூட இல்லை.

வர்ணம் கூட அடிக்கப்பட வில்லை. இந்த மையம் ரோட்டை விட பள்ளத்தில், தண்ணீர் செல்லும் வாய்க்காலில் கட்டப்பட்டு உள்ளது. மழை பெய்து தண்ணீர் தேங்கி, தண்ணீர் சூழ்ந்த அங்கன்வாடி மையத்திற்கு குழந்தைகளால் செல்ல முடியாது. குழந்தைகள் எளிதில் ஏறி செல்ல வசதியாக கட்டப்பட்ட கைப்பிடி சுவர் அப்படியே உடைந்து நொறுங்கி கிடக்கிறது.

சறுக்கு படியும் அரித்து உள்ளது. மீண்டும் மழை காலத்தில் தண்ணீரில் ஊறி அதுவும் உடையும் நிலையில் உள்ளது.

வாய்க்காலில் தண்ணீர் தேங்கும் படியும் கூட உடையும் நிலையில் உள்ளது. மழை காலத்திற்கு முன்பு கடகாம்பட்டி அங்கன்வாடி மையத்தை பராமரிப்பு பணி மேற் கொள்ள வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us