/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மிளகாய் பொடி துாவி பெண்ணிடம்செயின் பறிப்பு மிளகாய் பொடி துாவி பெண்ணிடம்செயின் பறிப்பு
மிளகாய் பொடி துாவி பெண்ணிடம்செயின் பறிப்பு
மிளகாய் பொடி துாவி பெண்ணிடம்செயின் பறிப்பு
மிளகாய் பொடி துாவி பெண்ணிடம்செயின் பறிப்பு
ADDED : மே 12, 2025 12:34 AM
காரைக்குடி : சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் கண்ணில் மிளகாய் பொடி துாவி 6 பவுன் செயினை இருபெண்கள் பறித்துச்சென்றனர்.
காரைக்குடி சந்தை பேட்டை சித்ரா 53. இவர் வீட்டிற்கு நேற்று முன்தினம் இரவு இரண்டு பெண்கள் வந்துள்ளனர். தனியாக இருந்த சித்ராவிடம், 'உங்கள் மருமகள் மகேஸ்வரி இருக்கிறாரா 'எனக்கேட்டுள்ளனர்.
அப்போது கதவை திறந்த சித்ராவின் கண்ணில் மிளகாய் பொடியை துாவி, அவர் அணிந்திருந்த 6 பவுன் செயினை பறித்து டூவீலரில் தப்பிச்சென்றனர்.
போலீசார் விசாரிக்கின்றனர்.