/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ சாலை விதியை பின்பற்றாமல் பைபாஸ் ரோடு பணிகள்; வாகன விபத்து அதிகரிக்கும் அச்சம் சாலை விதியை பின்பற்றாமல் பைபாஸ் ரோடு பணிகள்; வாகன விபத்து அதிகரிக்கும் அச்சம்
சாலை விதியை பின்பற்றாமல் பைபாஸ் ரோடு பணிகள்; வாகன விபத்து அதிகரிக்கும் அச்சம்
சாலை விதியை பின்பற்றாமல் பைபாஸ் ரோடு பணிகள்; வாகன விபத்து அதிகரிக்கும் அச்சம்
சாலை விதியை பின்பற்றாமல் பைபாஸ் ரோடு பணிகள்; வாகன விபத்து அதிகரிக்கும் அச்சம்

ரயில்வே பாலம் கட்டுவதில் இழுபறி
முதற்கட்டமாக நடைபெற்று வரும் பணிகளில் காஞ்சிரங்கால் முதல் ராகிணிபட்டி வரை ரோடு போட்டுள்ளனர். ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் இடத்தில் மேம்பாலம் கட்டும் பணி, ரயில்வேயின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. அதே போன்று ஆயுதப்படை குடியிருப்பில் 2 கட்டடங்களை இடித்து அகற்றுவதற்கான ஒப்புதல் கிடைப்பதிலும் தாமதம் ஏற்படுகிறது. அமைச்சர் எ.வ., வேலு ஆய்வின் போது 60 சதவீத பணி முடிந்து விட்டதாக அதிகாரிகள் கூறினர். இது போன்று ரயில்வே பாலம் கட்டுதல், ஆயதப்படை குடியிருப்பு அகற்றுதல் போன்ற பணிகளால் காஞ்சிரங்கால் முதல் கருங்குளம் வரை பைபாஸ் ரோடு அமைக்கும் திட்டம் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது.
ரோட்டை விட குறுகிய பாலம்
காஞ்சிரங்கால்- கருங்குளத்திற்கு இடைப்பட்ட 7.5 கி.மீ., துாரத்தில் 19 சிறிய, 9 பெரிய பாலங்கள் கட்டப்படுகின்றன. பைபாஸ் ரோடு 12 மீட்டர் அகலத்திற்கு போட்டுள்ளனர். இதில் சாம்பவிகா பள்ளிக்கு பின்னாலும், பையூர் அருகே உள்ள டாஸ்மாக் கடை முன் போடப்பட்டுள்ள சிறு பாலம், ரோட்டின் அகலத்திற்கு இன்றி குறுகிய பாலமாக உள்ளது. பைபாஸ் ரோடு பணிக்காக ரோட்டின் இருபுறமும் கிராவல் மண்ணை 10 அடி ஆழத்திற்கு எடுத்துள்ளனர்.
சந்திப்பு ரோட்டில் ைஹமாஸ் விளக்கு
முக்கிய ரோடு சந்திப்பு உள்ள காஞ்சிரங்கால், பையூர், பனங்காடி ரோட்டில் கே.வி., பள்ளி போன்ற இடங்களில் ைஹமாஸ் விளக்கு பொருத்தவில்லை. மேலும் சந்திப்பு ரோடுகளில் அதிகவேகமாக வரும் வாகனங்கள் சந்திப்பு ரோடுகளில் வரும் வாகனங்களின் மீது மோதி விபத்து ஏற்படும் நிலை உள்ளது.