ADDED : ஜூன் 11, 2025 07:27 AM

சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. இக்கோயில் பூப்பல்லக்கு உற்ஸவத்தை முன்னிட்டு நேற்று வீரையா கோவில் இளைஞர்கள் சார்பில் மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
சிங்கம்புணரி -- மேலூர் ரோட்டில் பெரிய மாடு, சின்ன மாடு என இரு பிரிவுகளாக நடந்ததில், 40 வண்டிகள் வரை பங்கேற்றன.
இரு பிரிவுகளிலும் முதல் நான்கு இடங்களை பிடித்த மாடுகளின் உரிமையாளர், சாரதிக்கும் பரிசு வழங்கப்பட்டது.