Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மடப்புரத்தில் உண்டியல் எண்ணும் பணி

மடப்புரத்தில் உண்டியல் எண்ணும் பணி

மடப்புரத்தில் உண்டியல் எண்ணும் பணி

மடப்புரத்தில் உண்டியல் எண்ணும் பணி

ADDED : மே 15, 2025 05:05 AM


Google News
Latest Tamil News
திருப்புவனம்: மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் நேற்று உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம், தங்க நகை , வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை எண்ணும் பணி நடந்தது.

பிரசித்தி பெற்ற காளி கோயில்களில் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலும் ஒன்று, இங்கு 40 நாட்களுக்கு ஒரு முறை பக்தர்கள் காணிக்கை செலுத்திய ஒன்பது உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்படும், அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் கவிதா ( சிவகங்கை) கணபதி முருகன் ( மடப்புரம்) , துணை ஆணையர் சங்கர்,கோயில் ஊழியர்கள், அன்னபூரணி சேவா சங்கத்தினர். உண்டியல் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் 28 லட்சத்து, 41 ஆயிரத்து 136 ரூபாய் ரொக்கமும், 272 கிராம் தங்கம், 445 கிராம் வெள்ளியும், கோசாலை உண்டியலில் 52 ஆயிரத்து 989 ரூபாய் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருந்தனர். ஆய்வர் அய்யனார், கண்காணிப்பார் பாஸ்கரன், சி.சி.டி.வி., கண்காணிப்பாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us