ADDED : ஜூன் 26, 2025 10:28 PM
சிவகங்கை; உலக ரத்த கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை ரத்த மையம் சார்பாக விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. முதல்வர் சத்யபாமா துவக்கி வைத்தார்.
மருத்துவக் கண்காணிப்பாளர் தங்கதுரை, உதவி நிலைய மருத்துவ அலுவலர்கள் முகமது ரபி, தென்றல், துறை தலைவர் டாக்டர் சர்மிளாதிலகவதி, உதவி பேராசிரியர் விஜயலட்சுமி உள்ளிட்ட மருத்துவ அலுவலர்கள் கலந்து கொண்டனர். மருத்துவக்கல்லுாரி மாணவர்கள் மக்களிடம் ரத்த தானம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.