ADDED : ஜூன் 26, 2025 01:16 AM

திருப்புவனம்: திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு கூட்டம் பி.டி.ஓ., பாலசுப்பிரமணியன் தலைமையில் நடந்தது.
மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி வெங்கடேஷ் பிரசாத், அரசு வழக்கறிஞர் சுப்பராயன், ஏட்டுகள் ராஜேஸ்வரி, சாரதா, ராதிகா, ஜூலி உள்ளிட்டோர் பங்கேற்றனர். போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.