ADDED : ஜன 18, 2024 05:59 AM
கீழடி : கீழடி அருகே சொட்டதட்டியைச் சேர்ந்த 17வயது சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் 40, ஆபாசமாக பேசியுள்ளார்.
சிறுமி அவரின் மனைவி பாக்கியத்திடம் புகார் செய்துள்ளார். அவரும் கண்டு கொள்ளாததால் தனது பெற்றோரிடம் கூறவே பெற்றோர் தட்டி கேட்டுள்ளனர். ஆத்திரமடைந்த ராஜேந்திரன், அவரது மனைவி பாக்யம், ராஜா, லோகு ஆகியோர் சிறுமியையும் உறவினர்களையும் தாக்கியுள்ளனர்.
மாவட்ட எஸ்.பி.,யிடம் கொடுத்த புகார்படி மானாமதுரை அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


