Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ முறையூர் கோயிலில் ஆனித்திருவிழா

முறையூர் கோயிலில் ஆனித்திருவிழா

முறையூர் கோயிலில் ஆனித்திருவிழா

முறையூர் கோயிலில் ஆனித்திருவிழா

ADDED : ஜூலை 01, 2025 02:51 AM


Google News
Latest Tamil News
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சிவகங்கை தேவஸ்தானத்துக்குட்பட்ட இக்கோயிலின் ஆனித் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 9:30 மணிக்கு உற்ஸவ மூர்த்திகளுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. தொடர்ந்து ரிஷபக் கொடியை பல்லக்கில் வைத்து கோயிலை வலம் வந்தனர்.

காலை 10:00 மணிக்கு கோயில் கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் கொடியேற்றினர். இரவு 8:30 மணிக்கு மீனாட்சி சொக்கநாதர் மற்றும் பரிவார தேவதைகளுக்கு காப்பு கட்டப்பட்டு வழிபாடு நடந்தது. 10 நாள் திருவிழாவாக ஒவ்வொரு நாளும் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடக்கிறது.

ஜூலை 5ல் கழுவன்விரட்டும், ஜூலை 6ல் மீனாட்சி பட்டாபிஷேகம் நடக்கிறது. ஜூலை 7ல் மீனாட்சி திருக்கல்யாணமும் ஜூலை 8ம் தேதி தேரோட்டமும் நடக்கிறது.

ஏற்பாடுகளை முறையூர் கிராமத்தார்கள் சிவகங்கை தேவஸ்தானம் செய்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us