ADDED : ஜன 22, 2024 05:05 AM
சிவகங்கை: நாட்டரசன்கோட்டை கே.எம்.எஸ்.சி., மகளிர் பள்ளியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
பேரூராட்சி துணை தலைவர் கார்த்திகா வரவேற்றார். தலைமை ஆசிரியை மகாலட்சுமி தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர் பிரியதர்ஷினி, தாசில்தார் யாஸ்மின் பர்கானா, தமிழாசிரியை சாந்தி, கவுன்சிலர் பாக்கியலட்சுமி, பள்ளிக்குழு தலைவர் கண்ணப்பன், செயலர் நாகராஜன், உறுப்பினர் சுப்பிரமணியம், ஆலோசகர் கண்ணப்பன் பங்கேற்றனர். ஆசிரியை சிவகாமி தொகுத்து வழங்கினார். ஆசிரியை காந்தி நன்றி கூறினார்.


