ADDED : செப் 18, 2025 05:45 AM
சிவகங்கை : தமிழ்நாடு ஏஐடியூசி கட்டட தொழிலாளர் சங்க கூட்டம் சிவகங்கை இந்திய கம்யூ.,அலுவலகத்தில் நடந்தது.
முன்னாள் மாநில குழு உறுப்பினர் குஞ்சரம் காசிநாதன் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் முருகன், மாவட்ட பொதுச்செயலாளர் ராஜா, கம்யூ., மாவட்ட துணை செயலாளர்கள் மருது, கோபால், மாவட்ட தலைவர் காளைலிங்கம், மாவட்ட துணைத் தலைவர் சகாயம், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.