/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ அரசு மகளிர் கல்லுாரியில் சேர்க்கை கவுன்சிலிங் அரசு மகளிர் கல்லுாரியில் சேர்க்கை கவுன்சிலிங்
அரசு மகளிர் கல்லுாரியில் சேர்க்கை கவுன்சிலிங்
அரசு மகளிர் கல்லுாரியில் சேர்க்கை கவுன்சிலிங்
அரசு மகளிர் கல்லுாரியில் சேர்க்கை கவுன்சிலிங்
ADDED : மே 31, 2025 12:23 AM
சிவகங்கை: சிவகங்கை அரசு மகளிர் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவிகள் சேர்க்கைக்கான கவுன்சிலிங் ஜூன் 2 ல் துவங்குவதாக முதல்வர் நளதம் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: இளங்கலை முதலாம் ஆண்டு மாணவிகள் சேர்க்கை கவுன்சிலிங் மூலம் நடைபெற உள்ளது. ஜூன் 2 ம் தேதி சிறப்பு பிரிவான மாற்றுத்திறனாளி, விளையாட்டு வீரர், தேசிய மாணவர் படை, முன்னாள் ராணுவ வீரர் வாரிகளுக்கு நடக்கும். ஜூன் 4 ம் தேதி அறிவியல் பாடப்பிரிவு, ஜூன் 5 ம் தேதி கலை பாடப்பிரிவு, ஜூன் 6 ம் தேதி தமிழ் மற்றும் ஆங்கில பாடப்பிரிவுக்கான கவுன்சிலிங் நடைபெறும்.
பிளஸ் 1, 2 மதிப்பெண் பட்டியல், ஜாதி சான்று, வருமான சான்று நகல், பாஸ் போர்ட் சைஸ் போட்டோ 2 உடன் பங்கேற்க வேண்டும். பாட வாரியாக கட்டண விபரம் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. மாணவிகள் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் கல்லுாரி இணையதளமான https.//gacwsvga.edu.in ல் தெரிந்து கொள்ளலாம், என்றார்.