Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மானாமதுரையில் சித்திரை தேரோட்டம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

மானாமதுரையில் சித்திரை தேரோட்டம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

மானாமதுரையில் சித்திரை தேரோட்டம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

மானாமதுரையில் சித்திரை தேரோட்டம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

ADDED : மே 10, 2025 07:17 AM


Google News
Latest Tamil News
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர்கோயில் சித்திரை திருவிழாவையொட்டி நடந்த தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்துக்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயில் சித்திரை திருவிழா மே 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் ஆனந்தவல்லி, சோமநாதர் திருக்கல்யாணம் நடைபெற்றது.

நேற்று தேரோட்ட விழாவிற்காக அதிகாலை சோமநாதர் பிரியாவிடையுடன் பெரிய தேருக்கும், ஆனந்தவல்லி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளினர்.

காலை 10:20 மணிக்கு பக்தர்கள் தேரை இழுத்து வந்தனர். தேர் நிலையை அடைந்தவுடன் ஏராளமானோர் நேர்த்திக் கடனாக தேங்காய்களை உடைத்தனர். பாதுகாப்பு பணியில் மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத், டி.எஸ்.பி., நிரேஷ் தலைமையில் போலீசார் ஈடுபட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us