Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கண்மாயில் கவிழ்ந்த பஸ் 53 பயணிகள் உயிர் தப்பினர் 6 பேர் காயம்

கண்மாயில் கவிழ்ந்த பஸ் 53 பயணிகள் உயிர் தப்பினர் 6 பேர் காயம்

கண்மாயில் கவிழ்ந்த பஸ் 53 பயணிகள் உயிர் தப்பினர் 6 பேர் காயம்

கண்மாயில் கவிழ்ந்த பஸ் 53 பயணிகள் உயிர் தப்பினர் 6 பேர் காயம்

ADDED : மே 10, 2025 07:18 AM


Google News
Latest Tamil News
நாச்சியாபுரம்: திருப்புத்துார் அருகே மேலமாகாணம் அருகில் கண்மாயில் பஸ் கவிழ்ந்து விழுந்ததில் 6 பயணிகள்காயமடைந்தனர். 53 பயணிகள் தப்பினர்

நேற்று காலை 7:30 மணிக்கு திருக்கோஷ்டியூரிலிருந்து காரைக்குடிக்கு தனியார் பஸ் சென்றது. மேலமாகாணம் அருகில் செல்லும்போது ரோட்டின் குறுக்கே மாடு வந்துள்ளது.

பஸ்சை திருப்பும் போது, கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் இருந்த கண்மாய் சரிவில் இறங்கி அருகிலிருந்த தாமரைக் கண்மாயில் கவிழ்ந்தது. பஸ்சில் இருந்த 6 பயணிகள் காயமடைந்தனர்.

மேலும் பஸ்சில் பயணம் செய்த 53 பயணிகளும் பஸ் கண்ணாடியை உடைத்து வெளியேறினர். பின்னர் கிரேன் மூலம் பஸ் கண்மாயிலிருந்து மீட்கப்பட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு செல்லப்பட்டது. நாச்சியாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us