Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ வாளுடன் வந்த 4 பேர் கைது

வாளுடன் வந்த 4 பேர் கைது

வாளுடன் வந்த 4 பேர் கைது

வாளுடன் வந்த 4 பேர் கைது

ADDED : ஜூன் 17, 2025 06:18 AM


Google News
மானாமதுரை; மானாமதுரையில் இரவில் வாளுடன் வலம் வந்த கல்லுாரி மாணவர் உட்பட 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து வாள், அருவாள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

மானாமதுரை பகுதியில் இரவில் சிலர் வாளுடன் வலம் வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தனிப்படை போலீசார் மானாமதுரை பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது வாளுடன் சுற்றிதிரிந்த சிவகங்கை மேலவாணியங்குடியை சேர்ந்த கண்ணன் மகன் பாலமுருகன் 19, ராஜகம்பீரம் முனியாண்டி மகன் தினேஷ் 20, மணி பாண்டியன் மகன் ஆகாஷ் 19, முகமது ரபிக் மகன் முகமது பையாஸ் 19 இவர் மதுரையில் உள்ள கல்லுாரியில் படிக்கிறார்.

4 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 4 வாள், 2 அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us