/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மக்கள் நீதிமன்றம் மூலம் 1914 வழக்குகளுக்கு தீர்வு மக்கள் நீதிமன்றம் மூலம் 1914 வழக்குகளுக்கு தீர்வு
மக்கள் நீதிமன்றம் மூலம் 1914 வழக்குகளுக்கு தீர்வு
மக்கள் நீதிமன்றம் மூலம் 1914 வழக்குகளுக்கு தீர்வு
மக்கள் நீதிமன்றம் மூலம் 1914 வழக்குகளுக்கு தீர்வு
ADDED : ஜூன் 14, 2025 11:49 PM
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட அளவிலான தேசிய மக்கள் நீதிமன்றங்கள் மூலம் 1914 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.11.20 கோடி வரை பயனாளிகளுக்கு வரவு வைக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தில் 13 மக்கள் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள சிவில் வழக்கு, சமரச குற்றவியல் வழக்கு, மோட்டார் வாகன விபத்து வழக்கு, வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
முதன்மை மாவட்ட நீதிபதி அறிவொளி, கூடுதல் மாவட்ட நீதிபதி பார்த்தசாரதி, ஊழல் தடுப்பு நீதிமன்ற நீதிபதி செந்தில்முரளி, சார்பு நீதிபதி பாண்டி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி ராதிகா, மாவட்ட உரிமையியல் நீதிபதி தீபதர்ஷினி, குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1 நீதிபதி செல்வம், குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 2 நீதிபதி தங்கமணி, வழக்கறிஞர்கள் ஜானகிராமன், செந்தில்குமரன், செந்தில்குமார் வழக்குகளை விசாரித்தனர்.
1756 குற்றவியல் வழக்கு, 104 காசோலை மோசடி வழக்கு, 186 வங்கிக் கடன் வழக்கு, 266 மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்கு, 72 குடும்பப் பிரச்னை சம்பந்தப்பட்ட வழக்கு, 389 சிவில் சம்பந்தப்பட்ட வழக்கு என மொத்தம் 2,773 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 1,866 வழக்குகள் சமரசமாக தீர்க்கப்பட்டு ரூ.10 கோடியே 56 லட்சத்து 91 ஆயிரத்து 981 வரை வழக்காடிகளுக்கு கிடைத்தது.
வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளில் 441 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 48 வழக்கிற்கு தீர்வு காணப்பட்டு ரூ.63 லட்சத்து 50 ஆயிரத்து 500 வரை வங்கிகளுக்கு வரவானது. ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பணியாளர்கள் செய்தனர்.