ADDED : மார் 20, 2025 05:58 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சங்கர் முன்னிலை வகித்தார். பொருளாளர் பழனிச்சாமி உறுதிமொழி வாசித்தார். நிர்வாகி தினகர பாண்டியன் பேசினார்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் உரிமை, நலன், பாதுகாப்பு, வாகன பராமரிப்பு, மருத்துவ உபகரண பொருட்கள் தொடர்பாக மாவட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுப்பது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.