Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ காப்புக் காடுகளில் 10 ஆயிரம் பறவைகள்

காப்புக் காடுகளில் 10 ஆயிரம் பறவைகள்

காப்புக் காடுகளில் 10 ஆயிரம் பறவைகள்

காப்புக் காடுகளில் 10 ஆயிரம் பறவைகள்

ADDED : மார் 18, 2025 05:55 AM


Google News
கணக்கெடுப்பில் தகவல்

திருப்புத்தூர்: சிவகங்கை கண்மாய்களில் வனத்துறையினர் நிலப்பரப்பு பறவைகள் கணக்கெடுப்பை மாவட்ட அளவில் நடத்தினர்.

திருப்புத்தூர் ஆ.பி.சீ.அ.கல்லூரி, சிவகங்கை அரசு மகளிர் கல்லூரி, காரைக்குடி சேதுபாஸ்கரா வேளாண் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள், தன்னார்வலர்கள், வனப்பணியாளர்கள் பங்கேற்றனர். டி.எப்.ஓ., செ.பிரபா, உதவி வனப்பாதுகாவலர் எம்.மணிகண்டன் முன்னிலையில் பயிற்சி அளிக்கப்பட்டது.

மாவட்ட அளவில் 25 காப்புக்காடு மற்றும் காப்பு நிலங்களில் நிலப்பரப்பு பறவைகள் கணக்கெடுக்கப்பட்டது.

கணக்கெடுப்பில் 120 இனங்களைச் சேர்ந்த 10 ஆயிரம் ஈர மற்றும் நிலப்பறவைகள் கணக்கிடப்பட்டது.

கடந்த ஆண்டை விட 514 பறவைகள் அதிகமாக காணப்பட்டது. கணக்கெடுப்பை வன அலுவலர் கார்த்திகேயன் உள்ளிட்ட திருப்புத்துார் வனத்துறையினர் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us