/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு ஊர்வலம் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு ஊர்வலம்
உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு ஊர்வலம்
உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு ஊர்வலம்
உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : ஜூலை 12, 2024 04:35 AM

சிவகங்கை: உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு சிவகங்கையில் விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் ஆஷா அஜித் துவக்கி வைத்தார். கல்லுாரி மாணவிகள், நர்சிங் பயிற்சியாளர்கள் பங்கேற்றனர்.
ஊர்வலத்தை கலெக்டர் துவக்கி வைத்தார். கலெக்டர் அலுவலகத்தில்இருந்து திருப்புத்துார் ரோடு வழியாக ராமசந்திரா பூங்கா அருகில் உள்ள மகப்பேறு மையத்தில் நிறைவு பெற்றது. கலெக்டர் உட்பட அதிகாரிகள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
தேவகோட்டை கோட்டாட்சியர் பால்துரை, துணை இயக்குனர் பிரியதர்ஷினி, மாவட்ட சுகாதாரஅலுவலர் விஜய்சந்திரன்,மாவட்ட சமூக நல அலுவலர் ரதிதேவி, மக்கள் கல்வி தகவல் அலுவலர் செந்தில்குமார் பங்கேற்றனர். மாணவிகளின் பரத நாட்டியம், கலை நிகழ்ச்சி நடந்தது.