/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்குவது எப்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்குவது எப்போது
அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்குவது எப்போது
அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்குவது எப்போது
அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்குவது எப்போது
ADDED : ஜூலை 13, 2024 05:07 AM
காரைக்குடி, : அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சீருடை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.
பள்ளிகள் திறந்தும் ஒரு மாணவருக்கு 2 செட் சீருடை வழங்கப்படும். சிறிது கால இடைவெளிக்கு பிறகு, மீண்டும் 2 செட் சீருடை வழங்கப்படும். சீருடைகள், மாணவர்களின் வளர்ச்சி, துணிகள் பயன்படுத்த முடியாத நிலையில் ஓராண்டுக்கு மேல் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. சில பெற்றோர்கள் தங்களது செலவில் சீருடைகளை வாங்க வேண்டி உள்ளது. கூட்டுறவு சங்கங்கள் மூலம் மாணவர்களுக்கு, ஆடை அளவு எடுக்கும் பணி நடந்தது.
ஆனால், பள்ளி திறந்து ஒரு மாதத்தை தாண்டியும் இதுவரை மாணவர்களுக்கு விலையில்லா சீருடை வழங்கவில்லை. அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சீருடைகளை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
கல்வி அதிகாரிகள் கூறுகையில்: மார்ச் முதல் மே வரை பள்ளிகளில் சீருடைக்கு அந்தந்த வட்டாரத்தில், கூட்டுறவு சங்கங்கள் மூலம் மாணவர்களுக்கு அளவெடுக்கப்பட்டது. சீருடை தைக்கும் பணி முடிந்து வரவில்லை. விரைவில் சீருடை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.