Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ காரைக்குடியில் தொழிற் சங்க கூட்டம்

காரைக்குடியில் தொழிற் சங்க கூட்டம்

காரைக்குடியில் தொழிற் சங்க கூட்டம்

காரைக்குடியில் தொழிற் சங்க கூட்டம்

ADDED : ஜூலை 02, 2024 10:35 PM


Google News
காரைக்குடி: காரைக்குடியில் ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்க மாவட்ட குழு கூட்டம் நடந்தது.

மாவட்ட துணைச்செயலாளர் கண்ணன் தலைமை ஏற்றார். தொழிற்சங்க மாவட்ட பொதுச் செயலாளர் ஏ.ஜி., ராஜா முன்னிலை வகித்தார்.

கட்டட தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளர் கோவை செல்வராஜ், மாநிலத் துணைச் செயலாளர் முனுசாமி, மாநில பொருளாளர் முருகன், இந்திய கம்யூ., மாவட்டச் செயலாளர் சாத்தையா, துணைச் செயலாளர் ராமச்சந்திரன் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், காரைக்குடி நகராட்சி மற்றும் ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து ஜுலை 20 ல் போராட்டம் நடத்துவது,தமிழ்நாடு கிராமப்புற தூய்மை பணியாளர்கள், பம்ப் ஆப்பரேட்டர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்கக்கோரி சிவகங்கையில் ஜூலை 10ம் தேதி காத்திருப்பு போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us