Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கல்வி நிறுவன கட்டடங்களை   வரன்முறைபடுத்த அவகாசம் 

கல்வி நிறுவன கட்டடங்களை   வரன்முறைபடுத்த அவகாசம் 

கல்வி நிறுவன கட்டடங்களை   வரன்முறைபடுத்த அவகாசம் 

கல்வி நிறுவன கட்டடங்களை   வரன்முறைபடுத்த அவகாசம் 

ADDED : ஆக 03, 2024 04:51 AM


Google News
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் கட்டட வரைபட அனுமதியின்றி நடைபெற்று வரும் கல்வி நிறுவன கட்டடங்களை வரன் முறைபடுத்த 2025 ஜன.,வரை வாய்ப்பு தரப்பட்டுள்ளது என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:

சிவகங்கை மாவட்டத்தில் திட்டமில்லாத பகுதியில் 2011 ஜன.,க்கு முன் கட்டப்பட்டு இயங்கி வரும் கல்வி நிறுவன கட்டடங்களை, வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் இணைய தளம் மூலம் விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

அதன்படி வரன்முறை இல்லாத கல்வி நிறுவன கட்டடங்களை வரன்முறை செய்திட, 2025 ஜன., 31க்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் விண்ணப்பித்து கல்வி நிறுவன கட்டடங்களை வரன்முறை செய்ய விரும்புவோர் www.tcp.org.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம், என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us