Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ முறையூரில் தீர்த்தவாரி

முறையூரில் தீர்த்தவாரி

முறையூரில் தீர்த்தவாரி

முறையூரில் தீர்த்தவாரி

ADDED : ஜூன் 23, 2024 04:00 AM


Google News
Latest Tamil News
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் ஆனித்திருவிழாவின் 10ம் திருநாளையொட்டி தீர்த்தவாரி உற்ஸவம் நடத்தது.

காலை 10:00 மணிக்கு சுவாமி அம்மன் புறப்பாடு, ஊடல் உற்ஸவம் நடந்தது. மதியம் 12:30 மணிக்கு பாலாற்றில் தீர்த்தம் கொடுக்கப்பட்டது. மாலை 5:00 மணிக்கு தீர்த்தமண்டகப்படியும், இரவு 8:00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடந்தது.

பெண்கள் பூத்தட்டு எடுத்து வந்து சுவாமியை வழிபட்டனர். அதிகாலை பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து கொடி இறக்கப்பட்டு ஆச்சார்ய உற்ஸவத்துடன் விழா நிறைவு பெற்றது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us