Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கட்டிக்குளத்தில் மின்தடையால் அவதி : டிரான்ஸ்பார்மருக்கு பூஜை செய்த மக்கள்

கட்டிக்குளத்தில் மின்தடையால் அவதி : டிரான்ஸ்பார்மருக்கு பூஜை செய்த மக்கள்

கட்டிக்குளத்தில் மின்தடையால் அவதி : டிரான்ஸ்பார்மருக்கு பூஜை செய்த மக்கள்

கட்டிக்குளத்தில் மின்தடையால் அவதி : டிரான்ஸ்பார்மருக்கு பூஜை செய்த மக்கள்

ADDED : ஜூலை 01, 2024 10:21 PM


Google News
Latest Tamil News
மானாமதுரை:

மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளம் கிராமத்தில் தொடர் மின்தடை மற்றும் குறைந்த அழுத்த மின்சாரமே வருவதால் டிரான்ஸ்பார்மருக்கு மக்கள் பூஜை செய்து தெருக்களில் உள்ள மின்கம்பங்களில் தீப்பந்தத்தை ஏற்றி எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

மானாமதுரை அருகே உள்ள கட்டிகுளம் கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்திற்கு ராஜகம்பீரம் துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்படுகிறது.கடந்த 40 வருடங்களுக்கு முன்பு பொருத்தப்பட்ட மின் கம்பிகள், மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர் தற்போது பழுதடைந்துள்ளன. மேலும் மின்கம்பிகள் பல இடங்களில் ஒட்டுப்போட்டு இணைக்கப்பட்டுள்ளதால் ஏராளமான இடங்களில் மின்கம்பிகள் தாழ்வாக தொங்கும் நிலையில் கட்டிக்குளம் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.

மேலும் குறைந்த அழுத்த மின்சாரமே வருவதால் கிராம மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருவதை தொடர்ந்து கடந்த வாரம் மினி டிரான்ஸ்பார்மர் பொருத்தப்பட்ட நிலையில் அதற்கு மின் இணைப்பு இதுவரை கொடுக்கப்படாமல் இன்னும் காட்சிப் பொருளாக உள்ளது.

மின்வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காததை கண்டித்து கிராம மக்கள் மின் கம்பங்களில் இரவு நேரங்களில் தீப்பந்தத்தை ஏற்றி வைத்தும், புதிதாக வைக்கப்பட்ட டிரான்ஸ்பார்மருக்கு மின் இணைப்பு கொடுக்காததை கண்டித்து மாலை போட்டு பூஜை செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us