ADDED : ஜூலை 22, 2024 04:52 AM
சிவகங்கை: சிவகங்கை அருகே அரசனுாரில் மாநில ஸ்கேட்டிங் போட்டி நடந்தது.
விளையாட்டு அலுவலர் ரமேஷ்கண்ணன், முதல்வர் இக்னேசியஸ்தாஸ் முன்னிலை வகித்தனர். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்.சிவராமன் போட்டியை துவக்கி வைத்தார். வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் வழங்கினர். சிவகங்கை, காஞ்சிபுரம், விழுப்புரம், சேலம், விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களை சேர்ந்த வயது 6 - 16 மாணவர்களுக்கு 8 பிரிவுகளின் கீழ் போட்டி நடத்தப்பட்டது.