ADDED : ஜூலை 11, 2024 05:12 AM
சிவகங்கை: சிவகங்கை உணவு பாதுகாப்பு அதிகாரி சரவணக்குமார் தலைமையில் வாரச்சந்தை மற்றும் உழவர் சந்தை பகுதியில் மீன் விற்கப்படும் இடங்களில் ஆய்வு செய்தனர்.
விற்பனைக்கு வைத்திருந்த மீன்களை சோதனை செய்தனர். சோதனையில் 40 கிலோ கெட்டுபோன மீன்களை பறிமுதல் செய்து அதை விற்ற இரண்டு வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.