ADDED : ஆக 04, 2024 05:59 AM
மானாமதுரை : மானாமதுரை சுந்தரபுரம் கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் நகராட்சி கமிஷனர் ரங்கநாயகி தலைமையில் துப்புரவு ஆய்வாளர் பாலமுருகன் முன்னிலையில் மேற்பார்வையாளர்கள் மற்றும் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் ஆய்வு செய்து அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், கப், ஆகியவற்றை பறிமுதல் செய்து அழித்தனர்.