ADDED : ஜூன் 16, 2024 10:24 PM

காரைக்குடி : காரைக்குடி சங்கர மணிமண்டபத்தில் ராதா கல்யாண மகோத்ஸவம் நடந்தது.
நேற்று முன்தினம் கல்யாணராம பாகவதர் தலைமையில் அஷ்டபதி பஜனை பூஜை நடந்தது. இரவு திவ்ய நாமபஜனையும், நேற்று காலை உஞ்சவிருத்தி பஜனை, மதியம் 12:30 மணிக்கு ராதா கல்யாணம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மகோத்ஸவ ஏற்பாடுகளை சந்திரசேகர், சிவக்குமார் செய்திருந்தனர்.