ADDED : ஜூன் 11, 2024 07:26 AM
சிவகங்கை : இளையான்குடி அருகே வல்லக்குளத்தில் நாளை மக்கள் தொடர்பு முகாம் நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
சூராணம் அருகே வல்லக்குளம் கிராமத்தில் அன்று காலை 10:00 மணிக்கு மக்கள் தொடர்பு முகாம் நடைபெறும். இம்முகாமில் அப்பகுதி மக்கள் பங்கேற்று, அரசு துறை சார்ந்த நலத்திட்ட உதவிகள், திட்டங்கள் குறித்து அறிந்து பயன்பெறலாம்.