ADDED : மார் 15, 2025 05:31 AM

சிவகங்கை: சிவகங்கை கலெக்டர் அலுவலக ஆர்ச் முன், தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் எஸ்.கண்ணுச்சாமி தலைமை வகித்தார்.
மாவட்ட துணை தலைவர்கள் மாரியப்பன், ஆறுமுகம், இணை செயலாளர்கள் ராமாயி, மணிமேகலை முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்ட செயலாளர் சீமைச்சாமி துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் குகன் சண்முகம் கோரிக்கையை விளக்கி பேசினார். மாவட்ட பொருளாளர் சரோஜினி நன்றி கூறினார்.