Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ நீர்நிலைகளில் கருவேல மரங்கள்

நீர்நிலைகளில் கருவேல மரங்கள்

நீர்நிலைகளில் கருவேல மரங்கள்

நீர்நிலைகளில் கருவேல மரங்கள்

ADDED : ஜூலை 01, 2024 10:18 PM


Google News
Latest Tamil News
சிங்கம்புணரி:

சிங்கம்புணரி அருகே நீர்நிலைகளில் உள்ள முட்செடிகளை அகற்ற வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இவ்வொன்றியத்தில் சதுர்வேதமங்கலம், வாடத்திப்பட்டி, சிலநீர்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் 3 பெரிய பாசனக் கண்மாய்களும், 23 சிறிய குளங்களும் உள்ளன. இவற்றில் சீமைக்கருவேல மரங்கள் நிறைந்துள்ளது.

மழைக்காலங்களில் நீர்ப்பிடிப்பு பகுதி குறைந்த அளவே தண்ணீர் தேங்குகிறது. மேலும் முட்செடிகளால் இருக்கும் தண்ணீரை கூட விவசாயத்திற்கு முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.

இங்கு வளரும் முள் செடிகளின் விதைகள் கால்வாய் வழியாக வயல்களிலும் சென்று முளைத்து விடுவதால் விவசாயம் பாழாகி வருகிறது. விவசாய நிலங்களை பாதுகாக்கும் பொருட்டு இக்கிரமங்களில் உள்ள அனைத்து நீர்நிலைகளிலும் வளர்ந்துஉள்ள முட்செடிகளை கிராம மக்களே அப்புறப்படுத்திக்கொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us