ADDED : ஜூலை 23, 2024 05:10 AM
சிவகங்கை: சிவகங்கையில் தமிழ்நாடு கலை இலக்கிய சங்க குழு கூட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் சரோஜினி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் குணசேகரன், மாநில பொது செயலாளர் சங்கரசுப்பிரமணியன், மாநில துணை செயலாளர் செல்வகுமார் சிறப்பு வகித்தனர். கூட்டத்தில் நடந்த படைப்பரங்கத்தில் கவிதை, சிறுகதை, ஓவியம் படைப்புகளை வழங்கினர். ஆக., 24 அன்று கலை இலக்கிய இரவு விழா நடத்துவதென தீர்மானித்தனர்.