ADDED : மார் 14, 2025 07:36 AM
திருப்புத்துார்: திருப்புத்துார் கிறிஸ்துராஜா மெட்ரிக்குலேஷன் மேல் நிலைப் பள்ளியில் தமிழ்,ஆங்கிலப் பேச்சரங்கம் நடந்தது.
மகளிர் தினத்தை முன்னிட்டு ‛பாரதி கண்ட புதுமைப் பெண்' என்ற தலைப்பில் தமிழ் பேச்சரங்கில் மாணவிகள் பேசினர். பின்னர் ஆங்கிலப் பேச்சரங்கம் நடந்தது. முதல்வர் தபசம் கரீம் வரவேற்றார். இன்ஸ்பெக்டர் தேவகி, பள்ளி பழைய மாணவி டாக்டர் கிப்டா ஜெயபியூலா,. பழைய மாணவி டாக்டர் கேதரின்,பள்ளித் தலைவர் விக்டர் பங்கேற்றனர். தாளாளர் ரூபன் அறிமுக உரையாற்றினார்.